ஹர ஹர நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

இன்று !

மஹா மந்திரங்கள்
கணபதி மந்திரம் ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய வரத மூர்த்தயே நமோ நம: --> ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா -->சுப்ரமண்யர் மூலமந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் வ்ரீம் ஸெளம் சரவணபவ--> ஐயப்பன் மூலமந்திரம் ஓம் ஹ்ரீம் அரஹர புத்ராயா, சர்வலாபாயா சத்ரு நாஸாயா மதகஜ வாகனாயா மஹா சாஸ்த்ரே நமஹ-->நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ
OM Bhur-Bhuvah-Svah. Tat savitur varenyam bhargo devasva dhimahi. Dhiyo yo nah pracodayat. ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும்09092777195
ஸ்ரீ சுபமஸ்து
சுபமஸ்து-->நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ!!!


விவாக தசவிதப் பொருத்தம்




1.
தினப் பொருத்தம்

பெண் ஜென்ம நக்ஷத்திர முதல் ஆண் நக்ஷத்திரம் வரையில் எண்ணி 9 ஆல் வகுக்க மிச்சம் 2, 4, 6, 8, 9 ஆகில் உத்தமம். 1, 3, 5, 7 ஆகாது. பெண்ணுக்கு 7வது ஆண் நக்ஷத்திரம் - வதம்.ஆணுக்கு 22 வது பெண் நக்ஷத்திரம் வைநாசிகம் கூடாது. பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, முலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, இவை 8ம் ஏக நக்ஷத்திரங்களாக வந்தால் விவாகம் செய்யக் கூடாது. சுபம்.



2. கணப் பொருத்தம்

தம்பதிகளிரண்டு பேருக்கும் ஒரே கணமானாலும், தேவ கணமும், மனுஷ கணமானாலும் உத்தமம். ஆண் ராக்ஷச கணமும், பெண் தேவ கணமுமானாலும் மத்திமம்.ஸ்த்ரீ ராக்ஷ்ச கணமும், புருஷன் மனுஷ கணமும் ஆனால் விவாகம் செய்யக் கூடாது.பெண் நக்ஷத்திரத்தில் இருந்து 14க்கு மேல் ஆண் நக்ஷத்திரம் இருந்தால், பெண் ராக்ஷச கணமும் ஆனாலும் தோஷமில்லை. விவாகம் செய்யலாம் என்பது சில ஜோதிடர்கள் கருத்து.



3. மாஹேந்திர பொருத்தம்

ஸ்திரீ நக்ஷத்திரம் முதல் ஆண் நக்ஷத்திரம் வரை எண்ணிக் கண்டது 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆகில் மாஹேந்திர பொருத்தம் உண்டு. தம்பதிகளுக்கு சம்பத்தை கொடுக்கும்.



4. ஸ்திரீ தீர்க்க பொருத்தம்


ஸ்திரீ நக்ஷத்திரத்திற்கு 13க்கு மேல் புருஷ நக்ஷத்திரம் இருந்தால் ஸ்திரீதீர்க்கம். சிலர் 7க்கு மேல் புருஷ நக்ஷத்திரம் இருந்தால் ஸ்திரீதீர்க்கம் உண்டு என்பர்.



5. யோனிப் பொருத்தம்

அசுவினி - சதயம் - குதிரை,
பரணி - ரேவதி - யானை,
கார்த்திகை - பூசம் - ஆடு,
ரோகிணி - மிருகசீரிஷம் - பாம்பு,
திருவாதிரை - முலம் - நாய்,
புனர்பூசம் - ஆயில்யம் - பூனை,
மகம் - பூரம்- எலி,
உத்திரம்- உத்திரட்டாதி - பசு,
அஸ்தம் - சுவாதி - எருமை,
சித்திரை - விசாகம் - புலி,
அனுஷம் - கேட்டை - மான்,
பூராடம் - திருவோணம் - குரங்கு,
உத்திராடம் - கீரி,
அவிட்டம் - பூரட்டாதி - சிங்கம்.
ஆண் - பெண் நக்ஷத்திரப் பகை இல்லாவிடில் யோனிப் பொருத்தம் உண்டு.



6. ராசிப் பொருத்தம்( வம்ச விருத்தி)

தம்பதிகள் ஒரே ராசியாயினும், ஒருவருக்கு ஒருவர் சமசத்தமாகினும் பெண் ராசிக்கு ஆண் ராசி 6க்கு மேற்படினும் உத்தமம், 3 - 4 மத்திமம். 2, 5, 6, 8 பொருந்தாது. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பமாகில் ஷஷ்டாஷ்டக தோஷமும் மற்ற ராசிகளாகில் 2 ஆம், 12ஆம் இடத்தோஷமுமில்லை என்பது சிலர் கருத்து.



7. ராசி அதிபதிப் பொருத்தம் (குழந்தை பேறு)

பெண் ராசி அதிபதிக்கு புருஷராசி அதிபதி ஒருவரானாலும், நட்பானாலும் உத்தமம். சமமானால் மத்திமம். பகை கூடாது. ஸ்திர ராசி யுக்ம ராசிகளாயிருந்தால் சுபம்.



8. வசியப் பொருத்தம்

மேஷம் - சிம்மம் - விருச்சிகம்
ரிஷபம் - கடகம் - துலாம்
மிதுனம் - கன்னி
கடகம் - விருச்சிகம் - தனுசு
சிம்மம் - துலாம்
கன்னி - மிதுனம் - மீனம்
துலாம் - மகரம்
விருச்சிகம் - கடகம்
தனுசு - மீனம்
மகரம் - மேஷம் - கும்பம்
கும்பம் - மேஷம்
மீனம் - மகரம்
இவைகள் வசியமாம், பெண் ராசிக்குப் புருஷ ராசி வஸ்யமாயினும் இருவர் ராசிகளும் ஒன்றாயினும் உத்தமம். புருஷ ராசிக்குப் பெண் ராசி வஸ்யமாகில் மத்திமம்.



9. ரஜ்ஜூப் பொருத்தம்

பாத - ஆரோ - அசுவனி, மகம், முலம்
ஏகரஜ்ஜூ - அவரோ - ஆயில்யம், கேட்டை, ரேவதி
ஊரு - ஆரோ - பரணி, பூரம், பூராடம்
ஏகரஜ்ஜூ - அவரோ - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
நாபி - ஆரோ - கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
ஏகரஜ்ஜூ -அவரோ - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
கண்ட - ஆரோ - ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்
ஏகரஜ்ஜூ - அவரோ - திருவாதிரை - சுவாதி - சதயம்
சிரோஜ்ஜூ - மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
தம்பதிகளிரு நக்ஷத்திரமும் ஏக ரேகையில் கூடினால் ரஜ்ஜூ தட்டுகிறது. அப்படி ஏக ரஜ்ஜூவானால் ரஜ்ஜூ பொருத்தமில்லை.



10.வேதைப் பொருத்தம்

அசுவனி - கேட்டை, பரணி - அனுஷம், கார்த்திகை - விசாகம், ரோகிணி - சுவாதி, மிருகசீரிஷம் - சித்திரை- அவிட்டம், திருவாதிரை - திருவோணம், புனர்பூசம் - உத்திராடம், பூசம் - பூராடம், ஆயில்யம் - முலம், மகம் - ரேவதி, பூரம் - உத்திரட்டாதி, உத்திரம் - பூரட்டாதி, அஸ்தம்-சதயம் இவைகள்ஒன்றுக்கொன்று வேதையாம். மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்இம்முன்றுக்கும் பரஸ்பர வேதைகள் பொருந்தாது.



11 . நாடிப் பொருத்தம்
பெண் நக்ஷத்திரம் முழு நாளானால் அசுவனி முதல் முன்று பர்வத்திலே எண்ண வேணும். 3\4 நக்ஷத்திரமானால் கார்த்திகை முதல் 4, ரோகிணியில் எண்ண வேணும் அர்த்த நக்ஷத்திரமானால் மிருகசீர்ஷ முதல் 5 பர்வத்திலே எண்ண வேணும். 2 நக்ஷத்திரங்களும் ஏக ரேகையில் கூடினால் நாடிப் பொருத்தமில்லை.



முக்கிய குறிப்பு:

தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ இந்த 5ம் முக்கியம், பிராம்மணர்களுக்கு தினமும், க்ஷத்ரியர்களுக்கு கணமும், வைசியர்களுக்கு ராசியும், சூத்திரர்களுக்கு யோனியும் எல்லா ஜாதியாருக்கும் ரஜ்ஜூம் மிகவும் முக்கியம். இவற்றில் ரஜ்ஜூ உட்பட 5 பொருத்தங்களுக்கு மேல் இருந்தால் சுப விவாகம் செய்யலாம்.
வாஸ்து நாள் நேரம்
சித்திரை 10 காலை 08.54 முதல் காலை 09.30 வரை
வைகாசி 21 காலை 09.58 முதல் காலை 10.34 வரை
ஆடி 11 காலை 07.44 முதல் காலை 08.20 வரை
ஆவணி 6 காலை 07.23 முதல் காலை 07.59 வரை
ஐப்பசி 11 காலை 07.44 முதல் காலை 08.20 வரை
கார்த்திகை 8 காலை 11.29 முதல் காலை 12.05 வரை
தை 12 காலை 10.41 முதல் காலை 11.17 வரை
மாசி 22 காலை 10.32 முதல் காலை 11.08 வரை
பார்த்துக்கொண்டிருக்கும் அன்பர்கள்!!!
free counter free counters visitors by country counter Locations of visitors to this page

Enter your email address:

உங்கள் Email Id பதிவு செய்க:

Delivered by: FeedBurner

2012-13ALL RIGHTS RESERVED. POWERED BY: அண்ணாமலை ஜோதிடம்-கும்மிடிப்பூண்டி SankarGurukkal ngpd

IN- CHENNAI - NGPD

 
back to top back to top

ஹர ஹர நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!